sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ராஜ்பவன் கால்வாயில் கழிவுநீர் விடும் வீடுகளுக்கு நோட்டீஸ் வழங்க முடிவு

/

ராஜ்பவன் கால்வாயில் கழிவுநீர் விடும் வீடுகளுக்கு நோட்டீஸ் வழங்க முடிவு

ராஜ்பவன் கால்வாயில் கழிவுநீர் விடும் வீடுகளுக்கு நோட்டீஸ் வழங்க முடிவு

ராஜ்பவன் கால்வாயில் கழிவுநீர் விடும் வீடுகளுக்கு நோட்டீஸ் வழங்க முடிவு


ADDED : செப் 21, 2025 11:23 PM

Google News

ADDED : செப் 21, 2025 11:23 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிண்டி;ராஜ்பவன் கால்வாயில், கழிவுநீர் மற்றும் குப்பை கொட்டுவதை தடுக்க, கால்வாயை ஒட்டி உள்ள வீடு, கடைகளுக்கு மாநகராட்சி நோட்டீஸ் வழங்க உள்ளது.

அடையாறு மண்டலம், 172வது வார்டு, கிண்டி, கவர்னர் மாளிகை வளாகம் மற்றும் தேசிய பூங்காவில் சேரும் மழைநீர், வேளச்சேரி ஏரியை அடையும் வகையில், 10 அடி அகலம், 1.5 கி.மீ., நீளத்தில் ராஜ்பவன் கால்வாய் கட்டப்பட்டது.

இந்த கால்வாயை ஒட்டி, வீடு, கடைகள் உள்ளன. மரக்கிளைகளும் கால்வாய் மேல் வளர்ந்துள்ளன. கழிவுநீர், மரக்கழிவுகள், குப்பை என, கால்வாயில் விழுந்து, சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது.

பருவமழையின் போது, நீரோட்டம் சீராக இருந்தால் தான், வெள்ள பாதிப்பை தடுக்க முடியும். இதற்காக, பாப்காட் வாகனம் பயன்படுத்தி, கால்வாயில் உள்ள சகதி, குப்பை வெளியேற்றப்படுகிறது.

கால்வாயில் குப்பை கொட்டாமல் இருக்கவும், கழிவுநீர் விடுவதை தடுக்கவும், மரக்கிளைகளை வெட்டி விடவும், கால்வாயை ஒட்டி உள்ள வீடு, கடைகளுக்கு நோட்டீஸ் வழங்க, மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதன்வாயிலாக, கால்வாயை சீராக வைத்திருக்க முடியும் என, அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us