sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

குழாயை மாற்றாததால் வடிகால்வாய் பணி மந்தம்

/

குழாயை மாற்றாததால் வடிகால்வாய் பணி மந்தம்

குழாயை மாற்றாததால் வடிகால்வாய் பணி மந்தம்

குழாயை மாற்றாததால் வடிகால்வாய் பணி மந்தம்


ADDED : ஜூன் 14, 2025 02:17 AM

Google News

ADDED : ஜூன் 14, 2025 02:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடபழனி:அசோக் நகர் முதல் கோயம்பேடு வரை உள்ள 100 அடி சாலை, மாநில நெடுஞ்சாலைத் துறை பராமரிப்பில் உள்ளது. இச்சாலையின் இருபுறமும், மழைநீர் வடிகால்வாய் உள்ளது. இதில் பல இடங்களில் இணைப்பு ஏற்படுத்தாமல் இருந்தனர்.

தொடர்ந்து, விடுபட்ட 1.7 கி.மீ., துாரத்திற்கு, 11 கோடி ரூபாயில் வடிகால்வாய் அமைக்கும் பணி, 2023ல் துவங்கப்பட்டது. வடபழனி 100 அடி சாலை அழகிரி தெரு முதல் அரும்பாக்கம் வரை, வடிகால்வாய் அமைக்க பள்ளம் தோண்டப்பட்டு, பணிகள் நடந்து வந்தன.

இதில், 250 மீட்டர் துார பணி மீதமுள்ள நிலையில், அவ்வழியாக குடிநீர் குழாய் செல்வதால், வடிகால்வாய்க்கு பள்ளம் தோண்ட முடியாமல், கடந்த ஜன., மாதம் பணிகள் நிறுத்தப்பட்டன.

குடிநீர் வாரியம் சார்பில், குழாயை மாற்றி அமைத்த பின், வடிகால்வாய் பணியை தொடர, நெடுஞ்சாலைத் துறையினர் திட்டமிட்டிருந்தது. இன்னும், குழாயை மாற்றி அமைக்காததால் விடுபட்ட பகுதியில் மழைநீர் வடிகால்வாய் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அப்பகுதியில் சாலை குறுகி இருப்பதால், வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது.






      Dinamalar
      Follow us