sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 09, 2026 ,மாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பணி ஓய்வு நாளில் செயற்பொறியாளர் 'சஸ்பெண்ட்'

/

பணி ஓய்வு நாளில் செயற்பொறியாளர் 'சஸ்பெண்ட்'

பணி ஓய்வு நாளில் செயற்பொறியாளர் 'சஸ்பெண்ட்'

பணி ஓய்வு நாளில் செயற்பொறியாளர் 'சஸ்பெண்ட்'


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, சென்னை மாநகராட்சி செயற்பொறியாளர் நாத்டான், 60. வளசரவாக்கம் மண்டலத்தில் பணி புரிந்தார். நேற்று முன்தினம் ஓய்வு பெற இருந்த நிலையில், மாலை 3:00 மணிக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை, நகராட்சி நிர்வாகத்துறை செயலர் கார்த்திகேயன் பிறப்பித்து உள்ளார்.

கடந்த ஆட்சியில் நடந்த குற்றச்சாட்டில், லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நிலுவையில் இருப்பதால், நாத்டான் பணி இடைநீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

பணி ஓய்வு நாளில், பணி இடைநீக்கம் செய்யப்பட்டதால் இதர பொறியாளர்கள் 110 பேர், கமிஷனர் ராதாகிருஷ்ணனை நேற்று சந்தித்தனர்.

அப்போது, பணியில் இருக்கும்போது விசாரணை செய்யாமல், அதையே காரணம் காட்டி, ஓய்வு நாளில் பணி இடைநீக்கம் செய்திருப்பது வருத்தம் அளிப்பதாக அவர்கள் முறையிட்டனர்.




    • Dinamalar Events


    Dinamalar