sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மீனவர் அடித்து கொலை கேரள வாலிபர் கைது

/

மீனவர் அடித்து கொலை கேரள வாலிபர் கைது

மீனவர் அடித்து கொலை கேரள வாலிபர் கைது

மீனவர் அடித்து கொலை கேரள வாலிபர் கைது


ADDED : ஜூன் 30, 2025 04:00 AM

Google News

ADDED : ஜூன் 30, 2025 04:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காசிமேடு:புதுவண்ணாரப்பேட்டையில் மீனவரை அடித்து கொன்ற வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.

புதுவண்ணாரப்பேட்டை, சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் கலைவாணன், 45; மீனவர். இவர், அப்பகுதி பெட்டி கடை அருகே நேற்று மது குடித்த போது, அங்கு வந்த ராகேஷ் என்பவர், 'நாங்கள் வழக்கமாக அமரும் இடத்தில் நீங்கள் ஏன் வந்தீர்கள்' என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த ராகேஷ், கலைவாணனை கையால் தாக்கி, காலால் உதைத்தார். நிலை தடுமாறி கீழே விழுந்த கலைவாணன், பின் தலையில் அடிபட்டு படுகாயமடைந்தார்.

அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கலைவாணனின் மனைவி தீபா கொடுத்த புகாரின்படி, காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார் வழக்கு பதிந்து, கொலை குற்றமாகாத மரணம் விளைவித்தல் பிரிவில் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

சம்பவத்தில் ஈடுபட்ட, கேரள மாநிலம், கொல்லத்தைச் சேர்ந்த ராகேஷ், 38, என்பவரை, மீன்பிடி துறைமுகம் ஜீரோ பாலம் அருகே போலீசார் நேற்று கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us