sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கிளாம்பாக்கம் காலநிலை பூங்கா பராமரிப்பு தனியார் வசமாகிறது

/

கிளாம்பாக்கம் காலநிலை பூங்கா பராமரிப்பு தனியார் வசமாகிறது

கிளாம்பாக்கம் காலநிலை பூங்கா பராமரிப்பு தனியார் வசமாகிறது

கிளாம்பாக்கம் காலநிலை பூங்கா பராமரிப்பு தனியார் வசமாகிறது


ADDED : மார் 21, 2025 12:24 AM

Google News

ADDED : மார் 21, 2025 12:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை,

கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்டுள்ள காலநிலை பூங்கா பராமிப்பை, ஐந்தாண்டுகால ஒப்பந்த அடிப்படையில் தனியாரிடம் ஒப்படைக்க, சி.எம்.டி.ஏ., முடிவு செய்துள்ளது.

சென்னை பெருநகர் போக்குவரத்து பெரிசலுக்கு தீர்வாக, வண்டலுாரை அடுத்த கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்ட பேருந்து நிலையம், 2023 டிச.,30ல் திறக்கப்பட்டது.

பேருந்து நிலையத்திற்கு, 88 ஏக்கர் நிலம் பெறப்பட்டாலும், தொல்லியல் துறை தடையால், 40 ஏக்கர் மட்டுமே பயன்படுத்தப்பட்டது.

பேருந்து நிலையத்தை ஒட்டியுள்ள, 16 ஏக்கர் நிலத்தில், சி.எம்.டி.ஏ.,வான சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம், 15 கோடி ரூபாயில், காலநிலை பூங்காவை அமைத்துள்ளது. இந்த பூங்கா சில மாதங்கள் முன் திறக்கப்பட்டது.

பொதுவாக இது போன்று அமைக்கப்படும் பூங்காக்கள், உள்ளாட்சி அமைப்புகள் பராமரிப்பில் விடப்படுவது வழக்கம். இதற்கு மாறாக, இந்த பூங்காவை தனியாரிடம் ஒப்படைக்க, சி.எம்.டி.ஏ., முடிவு செய்துள்ளது.

ஐந்தாண்டு ஒப்பந்த அடிப்படையில், பூங்காவை பராமரிப்பதற்கான தனியார் நிறுவனத்தை தேர்வு செய்யும் பணிகள் துவக்கப்பட்டுள்ளன.

அடுத்த சில மாதங்களில் பூங்கா பராமரிப்பு, தனியாரிடம் ஒப்படைக்கப்படும் என சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் தெரிவித்தனர்.

***






      Dinamalar
      Follow us