/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
உடற்கல்வி ஆசிரியர் ஆவடியில் மர்ம மரணம்
/
உடற்கல்வி ஆசிரியர் ஆவடியில் மர்ம மரணம்
ADDED : ஜன 26, 2024 12:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆவடி, ஆவடி, பெரியார் நகர் சுடுகாட்டில், ஆண் சடலம் கிடப்பதாக, ஆவடி போலீசுக்கு தகவல் வந்தது. ஆவடி, ஆனந்தா நகர் பெரியார் தெருவைச் சேர்ந்த தனியார் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் யுவராஜ், 33, என தெரிந்தது.
போலீசார் உடலை கைப்பற்றி, கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பினர்.
விசாரணையில், பெரியார் நகர் சுடுகாட்டில் நேற்று முன்தினம், ஆயுள் தண்டனை கைதி லட்சுமிபதி என்பவருடன் யுவராஜ் மது அருந்தியுள்ளார்.
அவர்களுக்குள் நடந்த தகராறில் யுவராஜ் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர்.

