ADDED : ஜன 11, 2024 12:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, ஜே.ஜே. தற்காப்பு அகாடமி சார்பில், குடியரசு தின கோப்பைக்கான, மாநில அளவிலான ஓபன் கராத்தே போட்டி, மயிலாப்பூர் சாந்தோம் பள்ளியில் நடந்தது.
இதில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 1,500க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பங்கேற்றனர். 5 முதல் 18 வயதுடையோருக்கு 'ஓபன்' முறையில் போட்டிகள் நடந்தன.
சென்னை சார்பில் பங்கேற்ற, 'ஆல் இந்தியா போபூகாய் இஷின்ரியு கராத்தே சங்கம்' சார்பில், 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பல்வேறு பிரிவுகளில் பங்கேற்ற இவர்கள், எட்டு முதலிடத்தையும், 14 இரண்டாம் இடத்தையும், 16 மூன்றாம் இடத்தையும் பிடித்து அசத்தினர்.

