sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

விபத்தில் உயிரிழந்த ஓட்டுனரின் குடும்பத்திற்கு நிவாரணம்

/

விபத்தில் உயிரிழந்த ஓட்டுனரின் குடும்பத்திற்கு நிவாரணம்

விபத்தில் உயிரிழந்த ஓட்டுனரின் குடும்பத்திற்கு நிவாரணம்

விபத்தில் உயிரிழந்த ஓட்டுனரின் குடும்பத்திற்கு நிவாரணம்


ADDED : மே 20, 2025 01:37 AM

Google News

ADDED : மே 20, 2025 01:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மணலிபுதுநகர், துாத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தனர் ரவி செல்வம், 47. இவர், மணலிபுதுநகர், சி.ஏ., லாஜிஸ்டிக் எனும் நிறுவனத்தில், லாரி ஓட்டுனராக பணிபுரிந்தார். கடந்த 14ம் தேதி, ஆந்திராவில் இருந்து, 'மேங்கோ ஜூஸ்' ஏற்றி வந்த கன்டெய்னர் லாரியை ஓட்டி வந்துள்ளார்.

ஆந்திர மாநிலம் சித்துார் பகுதியில், கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய லாரி விபத்துக்குள்ளானது. இதில், ரவி செல்வத்திற்கு காயம் ஏற்பட்டது. உடன் சென்ற மற்றொரு ஓட்டுனர் உதவியுடன், சென்னை, மணலிபுதுநகருக்கு அழைத்து வரப்பட்ட நிலையில், 15ம் தேதி காலை உயிரிழந்தார்.

இது குறித்து நிறுவனம் உரிய தகவல் தரவில்லை எனக்கூறி, ரவி செல்வத்தின் மனைவி ராஜேஸ்வரி மற்றும் உடன் பணியாற்றிய ஓட்டுனர்கள், தனியார் நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போலீசார் அவர்களை சமாதானம் செய்தனர்.

பின், பேச்சு நடத்தப்பட்டு, நிறுவனம் சார்பில், 7.25 லட்சம் ரூபாய் நிவாரண தொகை, உயிரிழந்த ரவி செல்வத்தின் குடும்பத்திற்கு வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us