sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

சுங்கத்துறை ஊழியரை கொன்ற கொத்தனார் சரண்

/

சுங்கத்துறை ஊழியரை கொன்ற கொத்தனார் சரண்

சுங்கத்துறை ஊழியரை கொன்ற கொத்தனார் சரண்

சுங்கத்துறை ஊழியரை கொன்ற கொத்தனார் சரண்


ADDED : ஜன 26, 2024 12:31 AM

Google News

ADDED : ஜன 26, 2024 12:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநின்றவூர்,ஆவடி அடுத்த திருநின்றவூர் வச்சலாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ், 58; சுங்கத்துறையில் ஓட்டுனராக பணியாற்றினார்

இவர், கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து, உறவினர் ஷீலா, 57, என்பவருடன் வாழ்ந்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு, வாயில் ரத்தக் காயங்களுடன், வீட்டில் ராஜ் இறந்து கிடந்தார்.

தகவலறிந்த திருநின்றவூர் போலீசார், அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இந்நிலையில் திருநின்றவூர், ராமதாஸ்புரம் பகுதியைச் சேர்ந்த கொத்தனாரான, ஷீலாவின் மருமகன் சேகர், 50, நேற்று காலை திருநின்றவூர் போலீசில் சரணடைந்தார்.

விசாரணையில், நேற்று முன்தினம் உறவினர் வீட்டு திருமணத்திற்கு துணி எடுக்க, ஷீலா சென்னை சென்றுள்ளார்

சேகர் அவரை தேடி, மதுபோதையில் வீட்டிற்குச் சென்றபோது, ஏற்கனவே மது போதையில் வீட்டில் இருந்த ராஜுவுடன் வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாகி உள்ளது. அப்போது சேகர் தாக்கியதில், ரத்தக் காயங்களுடன் ராஜ் மயங்கியுள்ளார். இதையடுத்து சேகர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இந்நிலையில், ராஜ் இறந்ததை அறிந்த சேகர், நேற்று தானாக வந்து போலீசில் சரணடைந்தது, விசாரணையில் தெரிந்தது.

சேகரை கைது செய்த திருநின்றவூர் போலீசார், அவரை திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us