/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் 400 ஸ்கூட்டி பரிசளிப்பு விழா
/
சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் 400 ஸ்கூட்டி பரிசளிப்பு விழா
சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் 400 ஸ்கூட்டி பரிசளிப்பு விழா
சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் 400 ஸ்கூட்டி பரிசளிப்பு விழா
ADDED : ஜன 28, 2024 12:15 AM
சென்னை, தமிழகத்தின் முன்னணி வர்த்தக நிறுவனமாக சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் உள்ளது. சென்னையில் தி.நகர், புரசைவாக்கம், குரோம்பேட்டை, போரூரில் நான்கு ஸ்டோர்கள் மற்றும் மதுரை மாட்டுத்தாவணியிலும் இதன் கிளைகள் அமைந்துள்ளன.
ஆண்டு முழுதும் வரும் வாடிக்கையாளர்களை கவுரவப்படுத்தும் விதமாக, 500 ஸ்கூட்டிகள் பரிசு வழங்கும் திட்டத்தை சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் அறிவித்தது.
சரஸ்வதி பூஜை, தீபாவளி, கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகைகளை கொண்டாடும் வகையில் அறிவுத்திறன் போட்டி பரிசு திட்டம் நடந்தது.
ஒவ்வொரு கிளையிலும் தினமும் ஒருவர் வீதம், 100 நாட்கள் நடந்த போட்டியில், 500 வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
வெற்றி பெற்ற வாடிக்கையாளர்களுக்கு உடனுக்குடன் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களின் விபரம் ஐந்து கிளைகளிலும், இணைய வலைதளத்திலும் பட்டியலிடப்பட்டன.
சூப்பர் ஸ்டோர்ஸ் பண்டிகை கால பரிசு திட்டத்தில், தி.நகர், புரசைவாக்கம், போரூர், குரோம்பேட்டை ஸ்டோர்களின் வெற்றி பெற்ற 400 வாடிக்கையாளர்களுக்கு ஸ்கூட்டி வாகனங்களை குடியரசு தினத்தன்று குரோம்பேட்டை சூப்பர் ஸ்டோர்ஸ் வளாகத்தில் நடந்த விழாவில் நிறுவனர் எஸ்.ராஜரத்தினம் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், நிர்வாக இயக்குனர் சபாபதி, இயக்குனர்கள் ரோஷன் ஸ்ரீரத்னம், யோகேஷ் ஸ்ரீரத்னம் உடன் இருந்தனர்.