sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 29, 2025 ,புரட்டாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

நாய்க்கடி ஊசி போட மறுக்கும் மருத்துவமனை செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் மக்கள் தவிப்பு

/

நாய்க்கடி ஊசி போட மறுக்கும் மருத்துவமனை செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் மக்கள் தவிப்பு

நாய்க்கடி ஊசி போட மறுக்கும் மருத்துவமனை செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் மக்கள் தவிப்பு

நாய்க்கடி ஊசி போட மறுக்கும் மருத்துவமனை செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் மக்கள் தவிப்பு


ADDED : பிப் 06, 2024 12:48 AM

Google News

ADDED : பிப் 06, 2024 12:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, சோழிங்கநல்லுார் மண்டலம், 200வது வார்டு, செம்மஞ்சேரி ஆரம்ப சுகாதார நிலையம் 24 மணி நேரம் செயல்படும். இந்த மருத்துமனை சென்னை மாவட்டத்தில் உள்ளது.

சில அடி துாரத்தில், செங்கல்பட்டு மாவட்டம் துவங்குகிறது. அங்கும், 24 மணி நேரம் செயல்படும், பெரும்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது.

இரண்டு மருத்துவமனையிலும், நாய்க்கடிக்கு ஊசி போடப்படும். ஆனால், பெரும்பாக்கம் பகுதி மக்களை நாய்க்கடி ஊசி போட சென்றால், செம்மஞ்சேரி மருத்துவமனையில் திருப்பி அனுப்புவதாகவும், செம்மஞ்சேரியில் இருந்து சென்றால், பெரும்பாக்கம் மருத்துவமனையில் திருப்பி அனுப்புவதாக புகார் எழுந்துள்ளது.

வெறி நாய்கடிக்கு, குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஊசி போடாவிட்டால், உயிருக்கு ஆபத்து ஏற்படும். ஆபத்தை உணர்ந்து, மருத்துவமனை நிர்வாகம் யார் வந்தாலும் ஊசி போடும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது குறித்து, பகுதிமக்கள் கூறியதாவது: செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் பகுதியை சுற்றி, 2 லட்சம் மக்களுக்கு மேல் வசிக்கின்றனர். இரண்டு மருத்துவமனையிலும், முதலில் எந்த பகுதி என கேட்பர். ஏரியா மாறி கூறினால், நாய்க்கடி மருந்து இருப்பு இல்லை, டாக்டர் வரவில்லை என, திருப்பி அனுப்புவர். அதே பகுதிமக்கள் சென்றால் ஊசி போடுகின்றனர். மாவட்ட எல்லை பிரச்னையை காரணம் காட்டி, உயிர் மீது விளையாடுவது நியாயமா? உயர்அதிகாரிகள் தலையிட்டு, எந்த பகுதி மக்களாக இருந்தாலும் நாய்க்கடிக்கு ஊசி போட வேண்டும் என, உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது, ‛‛ஏரியா மாறி வந்தால் ஊசி போடாமல் இருக்க மாட்டோம். சில நாட்கள் மருந்து இல்லையென்றால், பக்கத்து மருத்துவமனைக்கு செல்ல வலியுறுத்துவோம். போதிய ஊசி மருந்து வழங்க உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றனர்.






      Dinamalar
      Follow us