sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

குடிநீரில் மலம் கலந்தவர் கைது

/

குடிநீரில் மலம் கலந்தவர் கைது

குடிநீரில் மலம் கலந்தவர் கைது

குடிநீரில் மலம் கலந்தவர் கைது


ADDED : ஜன 27, 2024 12:40 AM

Google News

ADDED : ஜன 27, 2024 12:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவொற்றியூர், திருவொற்றியூர், கல்யாணி செட்டி நகரைச் சேர்ந்த மோகன், இவர் மனைவி சங்கீதா, 35. ஒரு மகன், மகள் உள்ளனர். இவரது பக்கத்து வீட்டில், உறவினரான எல்லப்பன், 45, என்பவர் வசிக்கிறார்.

இந்நிலையில், சங்கீதா திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார்.

அதில், தங்கள் வீட்டு தண்ணீர் தொட்டியில், எல்லப்பன் மலம் மற்றும் சிறுநீர் கலந்து வந்துள்ளார். இதன் காரணமாக, அந்த குடிநீரை பருகிய அனைவருக்கும், உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளன. அவர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரியிருந்தார்.

இதுகுறித்து, எல்லப்பனை அழைத்து போலீசார் விசாரித்த போது, குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். தானும், மோகனும் பங்காளி உறவினர்களாவர். எங்களுக்குள் இருந்த முன்விரோதம் காரணமாக, பழிவாங்கும் நோக்கில், இச்செயல்களில் ஈடுபட்டதாக கூறினார்.

இதையடுத்து, திருவொற்றியூர் போலீசார், நேற்று எல்லப்பனை கைது செய்து, அவர் மீது நோய் பரப்புவதற்கு காரணமாக இருந்ததாக, வழக்குப்பதிவு செய்தனர்.

அப்போது, எல்லப்பனுக்கு வலிப்பு நோய் மற்றும் சற்று மனநிலை பாதிப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, அவர் காவல் நிலைய ஜாமினில் விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இச்சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.






      Dinamalar
      Follow us