sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

நெருக்கடியான வாடகை கட்டடத்தில் இயங்கும் சார் - பதிவாளர் அலுவலகம்

/

நெருக்கடியான வாடகை கட்டடத்தில் இயங்கும் சார் - பதிவாளர் அலுவலகம்

நெருக்கடியான வாடகை கட்டடத்தில் இயங்கும் சார் - பதிவாளர் அலுவலகம்

நெருக்கடியான வாடகை கட்டடத்தில் இயங்கும் சார் - பதிவாளர் அலுவலகம்


ADDED : மார் 17, 2025 03:13 AM

Google News

ADDED : மார் 17, 2025 03:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குரோம்பேட்டை:குரோம்பேட்டை சார்-பதிவாளர் அலுவலகம் பல ஆண்டுகளாக வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது. இங்கு, தினமும் நுாற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். அவர்கள் அமர போதிய இடவசதி இல்லை.

ஆவணங்கள் வைப்பதற்கும், அதிகாரிகளுக்கும் போதிய அறைகள் இல்லை. அதிகாரிகளுக்கு மட்டும் கழிப்பறை வசதி உள்ளது. மக்களுக்கு கழிப்பறை வசதி இல்லை.

ஏற்கனவே நெரிசல் கொண்ட இச்சாலையில், பத்திரப் பதிவுக்கு வருவோரின் வாகனங்கள்நிறுத்தப் படுவதால், இன்னும் நெரிசல் அதிகரிக்கிறது.

பல ஆண்டுகளாக, நெருக்கடியான இடத்தில் வாடகை கட்டடத்தில் இயங்கும் இவ்வலுவலகத்திற்கு, இடம் ஒதுக்கி சொந்த கட்டடம் கட்ட வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வலியுறுத்துகின்றனர்.

பல்லாவரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., கருணாநிதி, இது தொடர்பாக சட்டசபையிலும் பேசினார்.

இதையடுத்து, பல பகுதிகளில் இடம் தேடி, பல்லாவரம் தாசில்தார் அலுவலகம் அருகே, அலுவலகம் கட்ட இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதனால், பத்திரப்பதிவு துறை நிதி ஒதுக்கி, கால தாமதமின்றி கட்டடம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us