sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஆசைக்கு இனங்க மறுத்த வாலிபரை அடித்து கொன்ற திருநங்கை கைது

/

ஆசைக்கு இனங்க மறுத்த வாலிபரை அடித்து கொன்ற திருநங்கை கைது

ஆசைக்கு இனங்க மறுத்த வாலிபரை அடித்து கொன்ற திருநங்கை கைது

ஆசைக்கு இனங்க மறுத்த வாலிபரை அடித்து கொன்ற திருநங்கை கைது


ADDED : மே 25, 2025 08:31 PM

Google News

ADDED : மே 25, 2025 08:31 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுவண்ணாரப்பேட்டை:சென்னை புதுவண்ணாரப்பேட்டை, ஏ.ஏ.ஸ்கீம் சாலையில், வாலிபர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக, புதுவண்ணாரப்பேட்டை போலீசாருக்கு அப்பகுதி மக்கள் நேற்று தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் சென்று, உடலை பிரேத பரிசோதனைக்கு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வண்ணாரப்பேட்டை இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் வழக்கு பதிந்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினார்.

அதில், நடைபாதையில் வசித்து வந்த கூலி தொழிலாளி ஜான்பாஷா, 35 என்பவர் உயிரிழந்தது தெரிந்தது.

நேற்று முன்தினம் நள்ளிரவு குடிபோதையில் நடைபாதையில் படுத்திருந்த ஜான்பாஷாவிடம் காசிமேடு, தேசிய நகரை சேர்ந்த திருநங்கை மலயா, 40 என்பவர் ஆசைக்கு இணங்குமாறு அழைத்துள்ளார்.

ஜான்பாஷா மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஆத்திரமடைந்த மலயா, குடிபோதையில் இருந்த ஜான்பாஷாவை கழுத்து, வயிற்று பகுதியில் கையால் தாக்கினார். இதில் நிலைகுலைந்து மயங்கி விழுந்த ஜான் பாஷா உயிரிழந்துள்ளார். மலயாவை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us