sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கழிவுநீர் கொட்டிய லாரி: கையோடு பிடித்த கலெக்டர்

/

கழிவுநீர் கொட்டிய லாரி: கையோடு பிடித்த கலெக்டர்

கழிவுநீர் கொட்டிய லாரி: கையோடு பிடித்த கலெக்டர்

கழிவுநீர் கொட்டிய லாரி: கையோடு பிடித்த கலெக்டர்


ADDED : ஜூன் 12, 2024 05:52 PM

Google News

ADDED : ஜூன் 12, 2024 05:52 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்றத்துார்: காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் ஒன்றியம், அமரம்பேடு ஊராட்சியில் நடக்கும் வளர்ச்சி பணிகளை, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி, நேற்று நேரில் ஆய்வு செய்தார்.

அப்போது, ஸ்ரீபெரும்புதுார் - குன்றத்துார் சாலையோரம் டேங்கர் லாரி ஒன்று, கழிவுநீரை ஊற்றிக் கொண்டிருந்தது. இதை பார்த்த கலெக்டர், அந்த லாரியை பிடித்து, சோமங்கலம் போலீசாரிடம் ஒப்படைத்தார்.

சோமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து, அமரம்பேடு பகுதியைச் சேர்ந்த லாரி உரிமையாளர் கிறிஸ்டோபர் மற்றும் ஓட்டுனர் தனுஷ் ஆகியோரிடம் விசாரிக்கின்றனர்.

குன்றத்துார் ஒன்றியத்திற்கு உட்பட்ட பல ஊராட்சிகளில், குடியிருப்புகளில் இருந்து எடுக்கப்படும் கழிவுநீரை, நீர்நிலை மற்றும் பொது இடத்தில் ஊற்றுவது அதிகரித்துள்ளது.

நீர்நிலை மற்றும் பொது இடங்களில் கழிவுநீரை ஊற்றும் லாரிகளை பிடித்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க, அதிகாரிகளுக்கு, கலெக்டர் உத்தரவிட வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us