/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மருத்துவ முகாமில் 220 பேருக்கு சிகிச்சை
/
மருத்துவ முகாமில் 220 பேருக்கு சிகிச்சை
ADDED : ஜூலை 29, 2024 02:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார்:அன்னுாரில் நடந்த மருத்துவ முகாமில், 220 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
கணேசபுரம், பேரூரடிகளார் மருத்துவமனை சார்பில், அன்னுார், கஸ்துாரி ஹாலில், இலவச மருத்துவ முகாம் நேற்று நடந்தது. முகாமை, பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகள் துவக்கி வைத்தார்.
முகாமில், 220 பேருக்கு, ரத்த அழுத்தம், சர்க்கரை, கண், மூட்டு உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டன. மருந்துகள் வழங்கப்பட்டன. மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
மருத்துவமனை தலைமை நிர்வாகி சுப்ரமணியம், ஒன்றிய சேர்மன் அம்பாள் பழனிசாமி, பேரூர் தமிழ் கல்லுாரி முதல்வர் சேதுராஜன் உள்பட பலர் பங்கேற்றனர்.