sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஊரக வளர்ச்சி அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

/

ஊரக வளர்ச்சி அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

ஊரக வளர்ச்சி அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

ஊரக வளர்ச்சி அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : ஜூன் 28, 2024 11:25 PM

Google News

ADDED : ஜூன் 28, 2024 11:25 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னுார்:கனவு இல்ல திட்டத்தில் கட்டமைப்பு வசதி ஏற்படுத்தக் கோரி, ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

'கனவு இல்லத் திட்டம் மற்றும் ஊரகப்பகுதிகளில் பழுதடைந்த சாய் தள வீடுகள் மற்றும் ஓட்டு வீடுகளை பழுது பார்க்கும் திட்டம் ஆகியவற்றுக்கு போதுமான ஊழியர் கட்டமைப்பு ஏற்படுத்த வேண்டும். கனவு இல்ல திட்ட பயனாளிகள் தேர்வுக்கு திருத்தப்பட்ட வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட வேண்டும்.

இத்திட்டத்தை நிறைவேற்ற கால அவகாசம் அளிக்க வேண்டும்' என வலியுறுத்தி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், அன்னூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், நேற்றுமுன்தினம் ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க மாநில துணைத்தலைவர் செந்தில்குமார் கோரிக்கையை விளக்கிப் பேசினார். வட்டார வளர்ச்சி அலுவலர் உமா சங்கரி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய பொறியாளர்கள், பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us