sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

இடைவிடாமல் பெய்த மழை இயல்பு வாழ்க்கை பாதிப்பு

/

இடைவிடாமல் பெய்த மழை இயல்பு வாழ்க்கை பாதிப்பு

இடைவிடாமல் பெய்த மழை இயல்பு வாழ்க்கை பாதிப்பு

இடைவிடாமல் பெய்த மழை இயல்பு வாழ்க்கை பாதிப்பு


ADDED : ஜூலை 16, 2024 02:05 AM

Google News

ADDED : ஜூலை 16, 2024 02:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி;பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு முதல், சிறிது நேர இடைவெளி விட்டு, விட்டு பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

ரோடுகளில் மழைநீர், கழிவுநீரும் கலந்து வெள்ளமாக ஓடியதால், வாகன ஓட்டுநர்கள் சிரமத்துக்குள்ளாகினர். ரோட்டில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி நின்றதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுபோன்று, பொள்ளாச்சி குடியிருப்பு பகுதிகளில் உள்ள கால்வாய்களில் இருந்து கழிவுநீரும், மழைநீரும் கலந்து ஓடியது; தெப்பக்குளம் ராஜகணபதி கோவில் அருகே கழிவுநீருடன், மழைநீரும் குட்டையாக தேங்கியதால், பக்தர்கள் சிரமப்பட்டனர்.

மழைக்காலங்களில் வடிகால்களை துார்வாரவும், கழிவுநீர் முறையாக செல்லவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.






      Dinamalar
      Follow us