sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

யானை வழித்தடத்தை மீட்க இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை

/

யானை வழித்தடத்தை மீட்க இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை

யானை வழித்தடத்தை மீட்க இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை

யானை வழித்தடத்தை மீட்க இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை


ADDED : ஜூலை 30, 2024 01:22 AM

Google News

ADDED : ஜூலை 30, 2024 01:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை;வால்பாறையில், யானை வழித்தடங்களை கண்டறிந்து அங்குள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்ற வேண்டும், என, இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய இரு வனச்சரகங்களிலும், அதிகளவில் யானைகள் உள்ளன. ஆண்டாண்டு காலமாக யானைகள் செல்லும் பாதையை மறித்து தேயிலை, காபி, ஏலம், மிளகு உள்ளிட்டவை பயிரிடப்பட்டுள்ளன.

சமீப காலமாக, யானை வழித்தடத்தில் சொகுசு விடுதிகளும் கட்டப்பட்டுள்ளன. இந்நிலையில், யானைகள் வழித்தடத்தை மீட்க வேண்டும் என, இயற்கை ஆர்வலர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

மனுவை விசாரித்த நீதிபதிகள், கோவை மாவட்ட வனப்பகுதியில் யானைகள் வழித்தடம் அதிக அளவில் உள்ளன. வழித்தடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால், யானை திசை மாறி குடியிருப்பு பகுதிக்குள் நுழைகின்றன. எனவே, யானைகள் வழித்தடத்தை கண்டறிந்து மீட்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

உயர் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், வால்பாறையிலும் யானைகள் வழித்தடத்தை கண்டறிந்து, மீட்க வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.






      Dinamalar
      Follow us
      Arattai