ADDED : ஆக 07, 2024 08:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை : கோவை மாநகராட்சியின் மேயராக இருந்த, தி.மு.க.,வின் கல்பனா, ராஜினாமா செய்ததால், புதிய மேயரை தேர்ந்தெடுக்க, நேற்று காலை, 10:30 மணிக்கு மறைமுகத் தேர்தல் நடந்தது.
தேர்தல் நடத்தும் அலுவலராக சிவகுரு பிரபாகரன் இருந்தார். வேட்பு மனுவை தி.மு.க.,வைச் சேர்ந்த ரங்கநாயகி தாக்கல் செய்தார். காலை, 11:00 மணி வரை வேறு யாரும் தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து, கோவை மாநகராட்சியின் 7வது மேயராக ரங்கநாயகி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.