/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சலானி நகை கண்காட்சி இன்றுடன் நிறைவு
/
சலானி நகை கண்காட்சி இன்றுடன் நிறைவு
ADDED : ஜூன் 09, 2024 12:21 AM
கோவை:சென்னை சலானி ஜூவல்லரி மார்ட்டின், மிகப்பெரிய நகை கண்காட்சி மற்றும் விற்பனை, அவிநாசி ரோட்டில் உள்ள ஓட்டல் கிராண்ட் ரீஜென்டில் நேற்று துவங்கியது.
கோவை ரோட்டரி கிளப்பை சேர்ந்த சுதா, திருப்பூர் ஆர்ட் கேலரி நிறுவனர் ரமா கண்காட்சியை துவக்கி வைத்தனர். கண்காட்சியில், எண்ணற்ற டிசைன்களில் ஆண்டிக் நகைகள், ஜடாவ் போல்கி நகைகள், டெம்பிள் நகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. வெள்ளியில் சீர்வரிசை பாத்திரங்கள், அலங்காரம் மற்றும் ஆடம்பர பொருட்கள், டைனிங் செட்கள் உள்ளன.
சிறப்பு சலுகையாக, இக்கண்காட்சியில் வாங்கும் வைர நகைகளுக்கும், ஜடாவ் போல்கி நகைகளுக்கும் செய்கூலி மற்றும் சேதாரம் இல்லை என, சலானி ஜூவல்லரி மார்ட் இயக்குனர் ஸ்ரீபால் சலானி தெரிவித்தார். கண்காட்சி, இன்று இரவு, 9:00 மணியுடன் நிறைவடைகிறது.