sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஒடிசாவில் தொடர் கொள்ளை: திருச்சியை சேர்ந்த 4 பேர் கைது

/

ஒடிசாவில் தொடர் கொள்ளை: திருச்சியை சேர்ந்த 4 பேர் கைது

ஒடிசாவில் தொடர் கொள்ளை: திருச்சியை சேர்ந்த 4 பேர் கைது

ஒடிசாவில் தொடர் கொள்ளை: திருச்சியை சேர்ந்த 4 பேர் கைது

2


ADDED : ஜூலை 20, 2024 03:57 AM

Google News

ADDED : ஜூலை 20, 2024 03:57 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒடிசா மாநிலத்தின் ஷாஹீத் நகரில் திருடப்பட்ட மொபைல் போன்களை, மர்ம நபர்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்படி, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், நான்கு பேர் கொண்ட கும்பலை கைது செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் நால்வரும் தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மோஹித், 48, மூர்த்தி, 42, நந்தகுமார், 47, தினேஷ், 47, என்பது தெரிந்தது.

இவர்கள் சாலையோரங்களில் நிறுத்தப்பட்டுள்ள கார்களின் கண்ணாடியை உடைத்து, உள்ளே இருக்கும் பொருட்களை திருடுவது, மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளை குறிவைத்து மொபைல் போன் மற்றும் விலைமதிப்புள்ள பொருட்களை கொள்ளையடிப்பதை வழக்கமாக வைத்திருந்தனர்.

ஒடிசாவில் மட்டும், இதுபோன்ற 10க்கும் மேற்பட்ட பகுதிகளில் கொள்ளைகளில் இந்த கும்பல் ஈடுபட்டது தெரிந்தது.

கைதான நபர்களிடம் இருந்து நான்கு லேப்டாப் கம்ப்யூட்டர்கள், 25 மொபைல் போன்கள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us