sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மத்திய அரசு திட்டங்களை தமிழக அரசு முறையாக அமல்படுத்துவதில்லை-! அமைச்சர் கிஷன் ரெட்டி குற்றச்சாட்டு

/

மத்திய அரசு திட்டங்களை தமிழக அரசு முறையாக அமல்படுத்துவதில்லை-! அமைச்சர் கிஷன் ரெட்டி குற்றச்சாட்டு

மத்திய அரசு திட்டங்களை தமிழக அரசு முறையாக அமல்படுத்துவதில்லை-! அமைச்சர் கிஷன் ரெட்டி குற்றச்சாட்டு

மத்திய அரசு திட்டங்களை தமிழக அரசு முறையாக அமல்படுத்துவதில்லை-! அமைச்சர் கிஷன் ரெட்டி குற்றச்சாட்டு


ADDED : ஜூலை 28, 2024 01:19 AM

Google News

ADDED : ஜூலை 28, 2024 01:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை;''தமிழகத்துக்கு, மத்திய அரசு பல திட்டங்களை வழங்கியபோதும், அதை முறையாக செயல்படுத்துவதில், மாநில அரசு தவறி வருகிறது,'' என, மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி கூறினார்.

கோவையில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் நோக்கில், மத்திய அரசு பட்ஜெட் அமைந்துள்ளது.

விவசாயிகள் நலன், மகளிர் மேம்பாடு, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு என ஒன்பது முக்கிய அம்சங்களை முன்னிலைப்படுத்தி இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.

தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி கட்டணம் குறைக்கப்பட்டிருப்பது, அது சார்ந்த தொழிலை மேம்படுத்தும், சிறு, குறு தொழில்கள் நிறைந்த கோவை போன்ற பகுதிகளுக்கு பயனுள்ள திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தின் வளர்ச்சிக்கு இந்த பட்ஜெட்டில் உரிய முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. ஆனால், முதல்வர் ஸ்டாலின், 'பட்ஜெட்டில் தமிழகத்தின் பெயர் இடம்பெறவில்லை.

தமிழ்நாடு புறக்கணிக்கப்படுகிறது' என கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. கடந்த, 10 ஆண்டுகளில் தமிழகத்தில் தொழில்துறையினர் மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

மத்திய அரசு தமிழகத்துக்கு பல திட்டங்களை வழங்கியபோதும், அதை முறையாக செயல்படுத்துவதில், மாநில அரசு தவறி வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

பணிகள் பாதிப்பு

பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை கூறியதாவது:தமிழக அரசு மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் ஆர்வம் காட்டுவதில்லை. எடுத்துக்காட்டாக, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளில் ஒரு மரத்தை அகற்ற, எட்டு மாத காலத்திற்கு பின் உத்தரவிடுகிறது. இத்தகைய பொறுப்பற்ற செயலால் திட்டங்களை அமல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டு, வளர்ச்சிப் பணிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன.மத்திய பட்ஜெட்டில் மாநிலங்களுக்கு முக்கியத்துவம் அல்லது நிதி உரிய வகையில் ஒதுக்கப்படவில்லை என கூறுவது அரசியல் சார்ந்த கருத்து. தமிழகம் எந்த வகையிலும் புறக்கணிக்கப்படவில்லை. கடந்தாண்டுகளை விட அதிகளவு திட்டங்கள் தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என்பது தான் உண்மை. சென்னை மெட்ரோ ரயில் திட்ட இரண்டாம் கட்ட பணிகளுக்கு மத்திய அரசு மட்டுமே 100 சதவீத நிதி ஒதுக்க வேண்டும் என்பது போல பொய்யான குற்றச்சாட்டை, தமிழக முதல்வர் கூறியுள்ளார். இவ்வாறு, அவர் கூறினார்.








      Dinamalar
      Follow us