sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கால்வாயில் சிக்கி தவித்த குட்டியானை: வனத்துறையினர் மீட்டு தாயிடம் சேர்ப்பு

/

கால்வாயில் சிக்கி தவித்த குட்டியானை: வனத்துறையினர் மீட்டு தாயிடம் சேர்ப்பு

கால்வாயில் சிக்கி தவித்த குட்டியானை: வனத்துறையினர் மீட்டு தாயிடம் சேர்ப்பு

கால்வாயில் சிக்கி தவித்த குட்டியானை: வனத்துறையினர் மீட்டு தாயிடம் சேர்ப்பு

2


UPDATED : ஜூன் 24, 2024 07:15 AM

ADDED : ஜூன் 24, 2024 07:12 AM

Google News

UPDATED : ஜூன் 24, 2024 07:15 AM ADDED : ஜூன் 24, 2024 07:12 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார் : முதுமலை அப்பர் கார்குடி அருகே, கால்வாயில் தவறி விழுந்து வெளியே வர முடியாமல் தவித்த, குட்டி யானையை வனத் துறையினர் மீட்டு தாயிடம் சேர்த்தனர்.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் அப்பர் கார்குடி அருகே, பிறந்து சில நாட்களான குட்டி யானை நேற்று (ஜூன் 23) தாயுடன் உலா வந்தது. பிற்பகல் குட்டி யானை, எதிர்பாராமல் அப்பகுதியில் உள்ள கால்வாயில் தவறி விழுந்து, வெளியே வர முடியாமல் தவித்தது. தாய் யானை பிளிறியபடி அதனை மீட்க போராடியது.

Image 1285126Image 1285127தகவல் அறிந்த வனச்சரகர் விஜய், வன ஊழியர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள், அப்பகுதிக்கு சென்று, தாய் யானையை அங்கிருந்து விரட்டினர். தொடர்ந்து, குட்டி யானை கால்வாயில் இருந்து, இரண்டு மணிநேரம் போராடி மீட்டு, தாய் யானையுடன் சேர்த்தனர். தொடர்ந்து அதனை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர். வனத் துறையினர் கூறுகையில், 'குட்டி யானையை கால்வாயில் இருந்து பாதுகாப்பாக மீட்டு, தாயுடன் சேர்த்து கண்காணித்து வருகிறோம். குட்டிக்கு எந்த பாதிப்பும் இல்லை; நல்ல நிலையில் உள்ளது,' என்றனர்.






      Dinamalar
      Follow us
      Arattai