ADDED : ஜூலை 29, 2024 03:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி;பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதியில், இளநீர் பண்ணை விலை கடந்த வார விலையை ஒப்பிடுகையில் எந்த மாற்றமும் கிடையாது.
ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர் சங்கத்தின், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது:
இந்த வாரம், நல்ல தரமான குட்டை நெட்டை வீரிய ஒட்டு இளநீரின் விலை, கடந்த வார விலையுடன் ஒப்பிடுகையில் எந்த மாற்றமும் இன்றி, 37 ரூபாயாக நிர்ணயம் செய்யப்படுகிறது.
இதேபோல, ஒரு டன் இளநீரின் விலை, 14,750 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இளநீர் வரத்து மிகவும் குறைந்து, தொடர்ந்து தட்டுப்பாடு ஏற்படுகிறது. தரமான இளநீருக்கு நல்ல விலை கிடைக்கிறது. தரம் குறைந்த சப்பல் இளநீருக்கு, குறைந்த விலைகிடைக்கிறது.
இவ்வாறு, அவர் கூறினார்.