/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மூன்றரை சவரன் நகை பஸ்சில் மாயம்
/
மூன்றரை சவரன் நகை பஸ்சில் மாயம்
ADDED : ஜூலை 14, 2024 11:00 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போத்தனூர்:மதுக்கரை சின்னைய கவுண்டர் வீதியை சேர்ந்தவர் ஷைலஜா, 38; காந்திபுரத்திலுள்ள எலக்ட்ரிக்கல் கடையில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து, மரக்கடை பஸ் ஸ்டாப்பிற்கு வந்தார். அங்கிருந்து குனியமுத்தூருக்கு (தடம் எண்: 4 ஜெ) பஸ்சில் பயணித்தார்.
பஸ் குனியமுத்தூரை வந்தடைந்தபோது, கீழே இறங்க முற்பட்ட ஷைலஜா, தான் அணிந்திருந்த மூன்றரை சவரன் தங்கத்தாலி செயின் மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இவரது புகாரின்பேரில், குனியமுத்தூர் புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்,