sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கஞ்சா வைத்திருந்த 5 பேர் கைது

/

கஞ்சா வைத்திருந்த 5 பேர் கைது

கஞ்சா வைத்திருந்த 5 பேர் கைது

கஞ்சா வைத்திருந்த 5 பேர் கைது


ADDED : மே 29, 2025 11:58 PM

Google News

ADDED : மே 29, 2025 11:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொண்டாமுத்துார்; பேரூர் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் எஸ்.ஐ., வினோத் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பேரூர் செட்டிபாளையம், சிறுவாணி மெயின் ரோட்டை ஒட்டியுள்ள, ஊராட்சி குப்பை கிடங்கு அருகே நின்று கொண்டிருந்த ஒரு கும்பல், போலீசாரை கண்டு தப்பி ஓட முயற்சித்தனர்.

இதனால், சந்தேகமடைந்த போலீசார், அவர்களை துரத்தி பிடித்து, சோதனை செய்தனர். அவர்களிடம் கஞ்சா பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது. விசாரித்தபோது, தாங்கள் உபயோகிக்க வைத்திருந்ததாக தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, பேரூர் போலீசார், பேரூர் செட்டிபாளையத்தை சேர்ந்த ராகுல், 25, சக்திவேல், 26, பச்சாபாளையத்தைச் சேர்ந்த சஞ்சீவ், 19, மனோஜ் குமார், 24, சஞ்சய், 19 ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 510 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us