sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

அனுமதியின்றி பேனர் வைத்ததாக அ.தி.மு.க.,வினர் மீது 55 வழக்கு

/

அனுமதியின்றி பேனர் வைத்ததாக அ.தி.மு.க.,வினர் மீது 55 வழக்கு

அனுமதியின்றி பேனர் வைத்ததாக அ.தி.மு.க.,வினர் மீது 55 வழக்கு

அனுமதியின்றி பேனர் வைத்ததாக அ.தி.மு.க.,வினர் மீது 55 வழக்கு


ADDED : செப் 12, 2025 07:40 AM

Google News

ADDED : செப் 12, 2025 07:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கோவை மாவட்டத்தில், அ.தி.மு.க., பொது செயலாளர் பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் செய்தபோது, அனுமதியின்றி பேனர் வைத்ததாக, அ.தி.மு.க., நிர்வாகிகள் மீது, 55 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

அ.தி.மு.க., பொது செயலாளர் பழனிசாமி, கோவை செல்வபுரத்தில், 9ல் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார்.

செல்வபுரத்தில் ரோடு ஷோ, தொண்டாமுத்துார், சுந்தராபுரம், கோதவாடிப்பிரிவு, பொள்ளாச்சி, ஆனைமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினார்.

அவரை வரவேற்று, பல்வேறு பகுதிகளிலும் கட்சியினர் பிளக்ஸ் பேனர்கள், எம்.ஜி.ஆர்., - ஜெ., 'கட்-அவுட்' வைத்திருந்தனர். அனுமதியின்றி பிளக் ஸ் பேனர்கள், 'கட்-அவுட்' வைத்ததாக, அந்தந்த பகுதி அ.தி.மு.க., நிர்வாகிகள் மீது, கோவை மாவட்டத்தில், தொண்டாமுத்துார், பேரூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, ஆனைமலை, வால்பாறை ஆகிய போலீஸ் ஸ்டேஷன்களில், 35 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

கோவை மாநகரில் போத்தனுார், குனியமுத்துார், சுந்தராபுரம், செல்வபுரம் ஆகிய போலீஸ் ஸ்டேஷன்களில், 20 வழக்குகள் என, மொத்தம், 55 வழக்குகள் பதியப்பட்டன.

போலீசார் கூறுகையில், 'பேனர்கள் வைக்கும் முன், அனுமதி கடிதம் கொடுத்து, அதற்குரிய கட்டணம் செலுத்த வேண்டும். அந்நடைமுறை பின்பற்றப்படவில்லை.

அனுமதியின்றி பேனர் வைப்பது குறித்து நீதிமன்றம் ஏற்கனவே வழிகாட்டுதல் வழங்கியுள்ளது' என்றனர்.






      Dinamalar
      Follow us