/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தென் திருப்பதியில் வில் அம்பு போடும் வைபவம்
/
தென் திருப்பதியில் வில் அம்பு போடும் வைபவம்
ADDED : ஜன 16, 2024 10:33 PM

மேட்டுப்பாளையம்:தென்திருப்பதி வேங்கடேஸ்வர வாரி கோவிலில், பார் வேட்டை வைபவம் மற்றும் வில் அம்பு போடும் விழா நடைபெற்றது.
மேட்டுப்பாளையம் அருகே ஜடையம்பாளையம் ஊராட்சி,தென்திருப்பதியில், வேங்கடேஸ்வர வாரி கோவில் உள்ளது. இங்கு மாட்டுப்பொங்கலை முன்னிட்டு, காலை, 5:55 மணிக்கு கோவில் நடை திறந்து சுப்ரபாதம் வாசிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து விஸ்வரூப தரிசனம், தோமாலை ஆகியவை நடந்தது.
ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக மலையப்ப சுவாமி எழுந்தருள் வைபங்கள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து மதியம், 12.30 மணிக்கு மலையப்ப சுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளி, பார்வேட்டை நடந்தது. அங்கு சுவாமியின் சார்பில், அர்ச்சகர்கள் வில் அம்பு எய்தி, வனவிலங்குகளை வேட்டையாடும் வைபவம் நடந்தது.
அங்கு வைத்திருந்த பொம்மை புலிகள், மான்களை, அர்ச்சகர்கள் எடுத்து வந்து சுவாமியின் பாதத்தில் வைத்தனர். இந்த வைபவத்தில் கே.ஜி., நிறுவனங்களின் தலைவர் பாலகிருஷ்ணன், நிர்வாக இயக்குனர் ஸ்ரீராம் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பின்பு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

