/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு பஸ்களில் தானியங்கி கதவு சரிவர இயங்கவில்லையா ? சீரமைத்து இயக்க எச்சரிக்கை
/
அரசு பஸ்களில் தானியங்கி கதவு சரிவர இயங்கவில்லையா ? சீரமைத்து இயக்க எச்சரிக்கை
அரசு பஸ்களில் தானியங்கி கதவு சரிவர இயங்கவில்லையா ? சீரமைத்து இயக்க எச்சரிக்கை
அரசு பஸ்களில் தானியங்கி கதவு சரிவர இயங்கவில்லையா ? சீரமைத்து இயக்க எச்சரிக்கை
ADDED : ஜூன் 13, 2025 09:37 PM
பொள்ளாச்சி; அரசு பஸ்களில், தானியங்கி கதவு சரிவர செயல்படாமல் இருந்தால், அதனை சீரமைத்து இயக்கவும், தவறும்பட்சத்தில் 'மெமோ' வழங்கப்படும் என, எச்சரிக்கப்பட்டுள்ளது.
அரசு போக்குவரத்து கழகம், பொள்ளாச்சி பணிமனைகளில் உள்ள புறநகர் மற்றும் டவுன் பஸ்களில், படியில் நின்றவாறு ஆபத்தான முறையில் பயணிப்பதை தடுக்க, தானியங்கி கதவு அமைக்கப்பட்டுள்ளது.
இதன் வாயிலாக, பஸ்சில் பயணம் செய்யும் மாணவர்கள் மற்றும் பயணியரின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. 'ஸ்டாப்' வந்தவுடன் மட்டுமே, டிரைவர் கதவை திறக்க வேண்டும். பயணியர் இறங்கி, ஏறியதுடன் கதவை மூட வேண்டும். அதேபோல, கண்டக்டரும் ஸ்டாப் வருவதை குரல் வாயிலாக முன்கூட்டியே தெரிவித்து பயணியரை இறக்க தயார்படுத்த வேண்டும்.
ஆனால், சில பஸ்களில், புதிதாக பொருத்தப்பட்ட தானியங்கி கதவு, சரிவர செயல்படுவதில்லை என, புகார் எழுந்தது. இந்நிலையில், கதவு சரிவர செயல்படாமல் இருந்தால், அதனை முறையாக சீரமைத்து இயக்கவும், தவறும்பட்சத்தில் 'மெமோ' வழங்கப்படும் என, பஸ் ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:
பயணியர் பாதுகாப்பு கருதியே, அரசு பஸ்களில் தானியங்கி கதவு பொருத்தப்பட்டுள்ளது. சில நேரங்களில் அந்த கதவு சரிவர திறக்காதபோது, பயணியர் சிரமப்படுகின்றனர். அதனால், தானியங்கி கதவு சரிவர செயல்படாமல் இருந்தால், அதனை சீரமைக்க டிரைவர்களுக்கு உரிய காலஅவகாசம் அளிக்கப்படுகிறது. அதனை மீறி கதவை திறந்தவாறு பஸ்சை இயக்குவது கண்டறியப்பட்டால், 'மெமோ' வழங்கப்படும் என, தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு, கூறினர்.