sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

குழாயில் உடைப்பு; குடிநீர் வீணாகும் அவலம்

/

குழாயில் உடைப்பு; குடிநீர் வீணாகும் அவலம்

குழாயில் உடைப்பு; குடிநீர் வீணாகும் அவலம்

குழாயில் உடைப்பு; குடிநீர் வீணாகும் அவலம்


ADDED : மே 19, 2025 11:15 PM

Google News

ADDED : மே 19, 2025 11:15 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்; குழாயில் உடைப்பு ஏற்பட்டு, இரவு பகலாக, குடிநீர் வீணாகி வருகிறது.

மேட்டுப்பாளையம் நகரில் உள்ள பவானி ஆற்றில் இருந்து, திருப்பூர் மாநகராட்சி மற்றும் வழியோர கிராமங்களுக்கும், மேட்டுப்பாளையம் நகராட்சிக்கும் தண்ணீர் எடுக்கப்படுகிறது. அதை சுத்தம் செய்து குழாய் வழியாக குடிநீர் அனுப்பப்படுகிறது.

திருப்பூர் மாநகராட்சிக்கு இரண்டாவது மற்றும் மூன்றாவது என, இரண்டு திட்டங்களுக்கு குடிநீர் எடுக்கப்படுகிறது.

இந்த குடிநீர் குழாய்கள், மேட்டுப்பாளையம் நகரில் உள்ள சாலைகளிலும், அன்னூர் சாலைகளிலும் பதிக்கப்பட்டுள்ளன.

இதில் நடூர் பாலம் அருகே, குழாயில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்,'கடந்த ஒரு வாரமாக குழாயில் உடைப்பு ஏற்பட்டு, இரவு பகலாக குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது.

திருப்பூரில் குடிநீர் பற்றாக்குறையால் மக்கள் அவதிப்படுகின்ற நிலையில், குழாய் உடைப்பை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதுதான் வேதனையை அளிக்கிறது.

எனவே உடனடியாக குழாய் உடைப்பை சரி செய்ய, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us