sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கோவை 'டாஸ்மாக்' அதிகாரிகள் மாற்றம்! 'தினமலர்' செய்தி எதிரொலி

/

கோவை 'டாஸ்மாக்' அதிகாரிகள் மாற்றம்! 'தினமலர்' செய்தி எதிரொலி

கோவை 'டாஸ்மாக்' அதிகாரிகள் மாற்றம்! 'தினமலர்' செய்தி எதிரொலி

கோவை 'டாஸ்மாக்' அதிகாரிகள் மாற்றம்! 'தினமலர்' செய்தி எதிரொலி


ADDED : ஜூன் 22, 2025 02:13 AM

Google News

ADDED : ஜூன் 22, 2025 02:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : நமது நாளிதழில் வெளியிடப்பட்ட செய்தியை தொடர்ந்து, கோவை மாவட்ட 'டாஸ்மாக்' அதிகாரிகள் மாற்றப்பட்டு, வேறு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கோவை மாவட்டத்தில், 'டாஸ்மாக்' மதுக்கடைகளுக்கு அருகே செயல்படும் மதுக்கூடங்களில் (பார்கள்) சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்கப்பட்டன. மதியம், 12:00 முதல் இரவு, 10:00 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும்.

ஆனால், அதிகாலை, 6:00 மணி முதல் சில இடங்களில், மது விற்பனை ஜோராக நடந்து வருகிறது. 'பார்'களில் இருப்பு வைத்து, கூடுதல் விலைக்கு விற்கப்படுகின்றன.

'பார்'களில் மதுபானங்கள் இருப்பு வைக்கவோ, விற்பனை செய்யவோ கூடாது. இவற்றை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டியது, 'டாஸ்மாக்' அதிகாரிகளின் பொறுப்பு. அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தனர்.

விதிமுறையை மீறி செயல்பட்ட 'பார்'கள் தொடர்பாக, 14ம் தேதி நமது நாளிதழில் படங்களுடன் விரிவாக செய்தி வெளியிடப்பட்டது. ஒவ்வொரு படமும் எந்த நேரத்தில் எடுக்கப்பட்டது என்கிற தகவலும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து, கோவை மாவட்டத்தில் பணிபுரிந்த 'டாஸ்மாக்' அதிகாரிகள் இருவரும் மாற்றப்பட்டுள்ளனர்.

புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் அதிகாரிகள், மதுக்கடைகள் மற்றும் 'பார்'களில் நடக்கும் முறைகேடுகளை தடுத்து நிறுத்துவார்களா என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

யார், யார் மாற்றம்?

l வடக்கு மாவட்ட மேலாளராக பணியாற்றிய வாணிலட்சுமி ஜெகதாம்பாள், சமூக பாதுகாப்பு திட்ட சப்-கலெக்டராக மாற்றப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக, காஞ்சிபுரம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.l தெற்கு மாவட்ட மேலாளராக பணிபுரிந்த தணிகாஜலம், தர்மபுரி மாவட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளராக இட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) ஜோதி சங்கர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.l தெற்கு தாலுகாவில் மாவுத்தம்பதி கிராமத்தில் செயல்படும், 'கால்ஸ் பீவரேஜஸ்' என்கிற மதுபானம் தயாரிக்கும் தனியார் நிறுவனத்துக்கு கலால் மேற்பார்வை அலுவலராக, சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரிந்த, கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராஜன் நியமிக்கப்பட்டிருக்கிறார்.l கோவை மாவட்டத்தில் காலியாக இருந்த, கலால் துணை ஆணையர் பணியிடத்துக்கு, கிருஷ்ணகிரியில் தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு டி.ஆர்.ஓ., வாக பணியாற்றிய முருகேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.








      Dinamalar
      Follow us