sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ரூ.8 கோடிக்கு கடன் வழங்க கூட்டுறவு சங்கங்களுக்கு இலக்கு

/

ரூ.8 கோடிக்கு கடன் வழங்க கூட்டுறவு சங்கங்களுக்கு இலக்கு

ரூ.8 கோடிக்கு கடன் வழங்க கூட்டுறவு சங்கங்களுக்கு இலக்கு

ரூ.8 கோடிக்கு கடன் வழங்க கூட்டுறவு சங்கங்களுக்கு இலக்கு


ADDED : செப் 01, 2025 07:28 PM

Google News

ADDED : செப் 01, 2025 07:28 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:

கோவை மண்டலத்தில் 137 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்படுகின்றன. விவசாய கடன், நகைக் கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன், மத்திய கால கடன் உட்பட பல்வேறு வகையான கடன்கள் வழங்கப்படுகின்றன.

2023- ஏப். முதல் 2024 மார்ச் 31 வரை, 47 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், ரூ.3 கோடி முதல் ரூ.6 கோடி அளவில் மட்டுமே கடன் வழங்கின. மற்ற சங்கங்கள் ரூ.6 கோடிக்கு மேல் கடன் வழங்கி வருகின்றன.

குறிப்பிட்ட சங்கங்களில் கடன் தொகையை, கூடுதலாக வழங்க வேண்டும் என்ற நோக்கில், அருகில் உள்ள கூட்டுறவு சங்கத்தினர், விற்பனையாளர்கள், அரசு அலுவலர்கள் என, 200க்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபடுத்தி, சிறப்பு முகாம்கள் நடத்தியதன் பலனாக, 47 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், 2024 ஏப். முதல் 2025 மார்ச் 31 வரை ரூ.6 கோடிக்கு மேல் கடன் வழங்கின. 2026 மார்ச்க்குள், 8 கோடிக்கு மேல் கடன் வழங்கும் வகையில், நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அழகிரி கூறுகையில், ''57 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், 8 கோடிக்கு கீழ் கடன் வழங்கி வந்தன. அதில், 21 சங்கங்கள், 8 கோடிக்கு மேல் கடன் வழங்கும் நிலைக்கு வந்து விட்டன.

மீதமுள்ள 36 சங்கங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது. அடுத்தாண்டு மார்ச் 31ல், அச்சங்கங்கள் இலக்கை எட்டும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us