ADDED : செப் 13, 2025 06:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; கோவை, கணபதி பகுதியை சேர்ந்தவர் சேகர்,65. ஏழு வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில், 2023, டிச., 27ல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அவர் மீது, கோவை முதன்மை போக்சோ சிறப்பு கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, விசாரணை நடந்து வந்தது. விசாரித்த நீதிபதி பகவதியம்மாள், குற்றம் சாட்டப்பட்ட சேகருக்கு, 20 ஆண்டு சிறை, 10,000 ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.