/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று கண் பரிசோதனை
/
ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று கண் பரிசோதனை
ADDED : ஜன 26, 2024 11:38 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வால்பாறை: வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று, இலவச கண் பரிசோதனை முகாம் நடக்கிறது.
வால்பாறை, முடீஸ், சோலையார் நகர் ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் சார்பில், வால்பாறை நகரில் இலவச கண் பரிசோதனை முகாம் நடக்கிறது. வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று நடக்கும் முகாமில், கண் தொடர்பான சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மேலும், கண் பரிசோதனைக்கு வருபவர்கள் ஆதார் அட்டை அல்லது ரேஷன் கார்டு கொண்டு வர வேண்டும் என, டாக்டர்கள் தெரிவித்தனர்.

