sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தாமதித்த பர்னிச்சர் நிறுவனம்  இழப்பீடு வழங்க உத்தரவு

/

தாமதித்த பர்னிச்சர் நிறுவனம்  இழப்பீடு வழங்க உத்தரவு

தாமதித்த பர்னிச்சர் நிறுவனம்  இழப்பீடு வழங்க உத்தரவு

தாமதித்த பர்னிச்சர் நிறுவனம்  இழப்பீடு வழங்க உத்தரவு


ADDED : ஜூன் 25, 2025 11:25 PM

Google News

ADDED : ஜூன் 25, 2025 11:25 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கோவை, வடவள்ளியை சேர்ந்த செந்தில்குமார் என்பவர், தனது வீட்டில் தானியங்கி கதவு பொருத்துவதற்காக, கணபதியிலுள்ள எஸ்.கே.ஸ்டீல்ஸ் பர்னிச்சர் நிறுவனத்தை தொடர்பு கொண்டார். தானியங்கி கதவுக்கு, 70,000 ரூபாய் செலவாகும் என தெரிவித்தனர்.

இதற்காக, முன்பணமாக, 53,000 ரூபாய் செலுத்தினார். கதவு பொருத்த பொருட்கள் கொண்டு வந்தனர். பல மாதங்களாகியும் வேலை ஆரம்பிக்காமல் கிடப்பில் போட்டனர். இதனால் 'அட்வான்ஸ்' பணத்தை திருப்பி கேட்ட போது, கொடுக்க மறுத்தனர்.

இழப்பீடு வழங்க கோரி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார். விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல் மற்றும் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில், 'பர்னிச்சர் நிறுவனம் , 'அட்வான்ஸ்' தொகை 53,000 ரூபாயை திருப்பி கொடுப்பதுடன், மனஉளைச்சலுக்கு இழப்பீடாக, 10,000 ரூபாய், வழக்கு செலவு, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us
      Arattai