sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தேசிய கராத்தே; சாதித்த அன்னுார் வீரர்

/

தேசிய கராத்தே; சாதித்த அன்னுார் வீரர்

தேசிய கராத்தே; சாதித்த அன்னுார் வீரர்

தேசிய கராத்தே; சாதித்த அன்னுார் வீரர்


ADDED : ஜன 16, 2024 11:29 PM

Google News

ADDED : ஜன 16, 2024 11:29 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னூர்:தேசிய அளவிலான கராத்தே போட்டியில், அன்னூர் வீரர் தங்கம் வென்றுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம், கான்பூரில், தேசிய அளவிலான 33வது கராத்தே போட்டி, கியாகுஷின் கராத்தே பவுண்டேஷன் சார்பில், கடந்த வாரம் இரண்டு நாட்கள் நடைபெற்றது.

இதில் தமிழகத்திலிருந்து அன்னூரைச் சேர்ந்த சுனில் குமார் மற்றும் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை சேர்ந்த வீரர் என இருவர் பங்கேற்றனர்.

அன்னூர் வீரர் சுனில் குமார், 18 வயதுக்கு மேற்பட்ட பிரிவில், 60 கிலோ எடை வரையிலான பிரிவில் பங்கேற்றார். இதில் முதலிடம் பெற்று, தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

இந்த வீரர் ஏற்கனவே 2017ல், இந்தோனேசியாவில் நடைபெற்ற ஆசிய அளவிலான கராத்தே போட்டியில் 2ம் இடம் பெற்று, வெள்ளி பதக்கம் வென்றார்.

தங்கப்பதக்கம் வென்ற சுனில்குமாருக்கு, மேட்டுப்பாளையத்தில் நீலகிரி எம்.பி., ராசா கவுரவித்து நிதி உதவி வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், தி.மு. க., மாவட்ட செயலாளர் ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர். தங்கப்பதக்கம் வென்ற வீரர் சுனில் குமாருடன், பயிற்சியாளர் ஞானபண்டிதன், கோவை எம்.எம்.ஏ., ஜிம் நிர்வாகிகள், ஆகியோருக்கும், பாராட்டு தெரிவிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us