sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

காட்டுயானை தாக்கிஒருவர் படுகாயம்

/

காட்டுயானை தாக்கிஒருவர் படுகாயம்

காட்டுயானை தாக்கிஒருவர் படுகாயம்

காட்டுயானை தாக்கிஒருவர் படுகாயம்


ADDED : செப் 26, 2025 06:52 AM

Google News

ADDED : செப் 26, 2025 06:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடவள்ளி:பொம்மணம்பாளையம், சின்னமலையையொட்டியுள்ள தோட்டத்தில், ஒற்றைக்காட்டு யானை தாக்கியதில், ஒருவர் படுகாயமடைந்தார்.

கோவை வனச்சரகத்திற்குட்பட்ட, பொம்மணம்பாளையம், சின்னமலையையொட்டி உள்ள ராஜேந்திரன் என்பவரது தோட்டத்தில், ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த செந்தில், 55 என்பவர், கடந்த, 10 ஆண்டுகளாக, தோட்டத்தில் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வருகிறார். இந்நிலையில், செந்தில், நேற்று இரவு, மனைவியுடன் கடைக்கு சென்றுவிட்டு, வீடு திரும்பியுள்ளார். மனைவியை வீட்டில் விட்டுவிட்டு, தோட்டத்திற்குள் சென்றுள்ளார்.

அப்போது, எதிர்பாராத விதமாக, அங்கு வந்த ஒற்றை காட்டு யானை, செந்திலை தாக்கியது. இதில், காட்டு யானை தாக்கியதில் செந்திலின் வயிற்று பகுதியில் காயம் ஏற்பட்டது. செந்திலின் கூச்சல் சத்தம் கேட்டு வந்தவர்கள், அவரை மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு, தொடர்ந்து, தீவிர சிகிச்சை பிரிவில், செந்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.






      Dinamalar
      Follow us
      Arattai