sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 20, 2025 ,புரட்டாசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

குற்றவாளிகளின் நகை, பணத்தை 'லபக்'கிய போலீஸ் எஸ்.ஐ., கைது

/

குற்றவாளிகளின் நகை, பணத்தை 'லபக்'கிய போலீஸ் எஸ்.ஐ., கைது

குற்றவாளிகளின் நகை, பணத்தை 'லபக்'கிய போலீஸ் எஸ்.ஐ., கைது

குற்றவாளிகளின் நகை, பணத்தை 'லபக்'கிய போலீஸ் எஸ்.ஐ., கைது


ADDED : ஜூன் 01, 2025 02:55 AM

Google News

ADDED : ஜூன் 01, 2025 02:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில், கொலை குற்றவாளிகளின் நகை, பணத்தை கையாடல் செய்த எஸ்.ஐ.,யை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி, முல்லை நகரில், 'யுதிரா சாரிடபிள் டிரஸ்ட்' என்ற தனியார் காப்பகத்தில் இருந்த, கோவை, சோமனுாரை சேர்ந்த வருண்காந்த், 22, என்ற மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபரை, காப்பக நிர்வாகிகள், ஊழியர்கள் அடித்து கொலை செய்து, தோட்டத்தில் புதைத்தனர்.

பொள்ளாச்சி, மகாலிங்கபுரம் போலீசார், காப்பக நிர்வாகிகளான கிரிராம், ஷாஜூ, கவிதா உட்பட 11 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கைப்பற்றிய, 17.5 சவரன் நகை, 1.52 லட்சம் ரூபாய் பணம் கையாடல் செய்யப்பட்டிருப்பதாக ஏ.எஸ்.பி., சிருஷ்டி சிங்கிற்கு தகவல் கிடைத்தது.

மகாலிங்கபுரம் போலீசார் விசாரித்ததில், அந்த ஸ்டேஷன் எஸ்.ஐ., நவநீதகிருஷ்ணன், கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கைப்பற்றிய பணம் மற்றும் நகையை உறவினர்களிடம் ஒப்படைக்காமல், கையாடல் செய்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

நகை, பணம் கையாடலில், போலீஸ் அதிகாரிகள், போலீசார் யாருக்கெல்லாம் தொடர்புள்ளது என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது.






      Dinamalar
      Follow us