sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

இரு நாள் சிறப்பு வரி வசூல் முகாம் பொதுமக்கள் பயன்பெற அழைப்பு

/

இரு நாள் சிறப்பு வரி வசூல் முகாம் பொதுமக்கள் பயன்பெற அழைப்பு

இரு நாள் சிறப்பு வரி வசூல் முகாம் பொதுமக்கள் பயன்பெற அழைப்பு

இரு நாள் சிறப்பு வரி வசூல் முகாம் பொதுமக்கள் பயன்பெற அழைப்பு


ADDED : ஜன 27, 2024 12:01 AM

Google News

ADDED : ஜன 27, 2024 12:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: வரியினங்கள் செலுத்தும் வசதிக்காக இன்றும், நாளையும் மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளிலும் சிறப்பு வரி வசூல் நடக்கிறது.

நடப்பு, 2023-24ம் நிதியாண்டின் இரண்டாம் அரையாண்டு வரை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, காலியிட வரி உள்ளிட்ட வரியினங்களை செலுத்த ஏதுவாக, காலை, 9:00 முதல் மதியம், 3:00 மணி வரை, சிறப்பு வரி வசூல் முகாம் நடக்கிறது.

கிழக்கு மண்டலம், 56, 57வது வார்டுகளுக்கு ஒண்டிப்புதுார் சுங்கம் மைதானத்திலும், மேற்கு மண்டலத்தில், 75வது வார்டு மாரியம்மன் கோவில் தெருவிலும், தெற்கு மண்டலத்தில், 85வது வார்டு கோணவாய்க்கால்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியிலும் முகாம் நடக்கிறது.

மாநகராட்சி, 87வது வார்டு, குனியமுத்துார் அனைத்து குடியிருப்பு நலச்சங்கங்களின் கூட்டமைப்பு அலுவலகம், அம்மன் கோவில் ரோட்டிலுள்ள வணிக வளாகத்திலும், மத்திய மண்டலத்தில், 32வது வார்டு சிறுவர் பூங்கா, சங்கனுார் நாராயணசாமி வீதியிலும் இடம்பெறுகிறது.

62வது வார்டு பெருமாள் கோவில் வீதி, மாநகராட்சி வணிக வளாகம், 80வது வார்டு கெம்பட்டி காலனி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, 84வது வார்டு ஜி.எம். நகரில் உள்ள தர்கத் இஸ்லாம் பள்ளியிலும், சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.

மேற்கு மண்டலம், 35வது வார்டு தேவாங்க நகர், கற்பக விநாயகர் கோவில் வளாகத்தில் நாளை மட்டும் முகாம் நடக்கிறது. பொது மக்கள் இவ்வசதியினை பயன்படுத்தி, வரியினங்களை செலுத்துமாறு மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.






      Dinamalar
      Follow us