sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கார்கில் வீரர்களுக்கு பள்ளியில் வீரவணக்கம்

/

கார்கில் வீரர்களுக்கு பள்ளியில் வீரவணக்கம்

கார்கில் வீரர்களுக்கு பள்ளியில் வீரவணக்கம்

கார்கில் வீரர்களுக்கு பள்ளியில் வீரவணக்கம்


ADDED : ஜூலை 28, 2024 08:57 PM

Google News

ADDED : ஜூலை 28, 2024 08:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:கீதாஞ்சலி பப்ளிக் பள்ளியில், மாணவர்கள் கார்கில் வெற்றி தினத்தைக் கொண்டாடினர்.

கார்கில் போரின் போது, வீரத்துடன் போராடி உயிர்தியாகம் செய்த வீரர்களுக்கு, வீரவணக்கம் செலுத்தப்பட்டது. கார்கில் போர் வீரர்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் ஏழாம் வகுப்பு மாணவர்கள் நடனமாடி, வீரர்களுக்கு மரியாதை செலுத்தினர்.

கார்கில் போரின் போது, இந்திய விமானப்படையில் பணியாற்றிய கீதாஞ்சலி மெட்ரிக் பள்ளியின் முதல்வர் குரூப் கேப்டன் நடராஜ், லடாக் பகுதியில் இந்திய ராணுவத்துக்கும், பாகிஸ்தானிய ஊடுருவல்காரர்களுக்கும் இடையே நடந்த, போர்க்கள காட்சிகளை விவரித்தார்.

கீதாஞ்சலி குழுமப் பள்ளிகளின் தலைவர் அழகிரிசுவாமி, கீதாஞ்சலி பப்ளிக் பள்ளியின் முதல்வர் கவிதா, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், கார்கில் போரில் உயிர் நீத்த வீரர்களுக்கு மலர் வளையம் வைத்தும், மலர் துாவியும் அஞ்சலி செலுத்தினர்.






      Dinamalar
      Follow us