sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

நாட்டு துப்பாக்கியை போட்டு வேட்டை கும்பல் தெறித்து ஓட்டம்

/

நாட்டு துப்பாக்கியை போட்டு வேட்டை கும்பல் தெறித்து ஓட்டம்

நாட்டு துப்பாக்கியை போட்டு வேட்டை கும்பல் தெறித்து ஓட்டம்

நாட்டு துப்பாக்கியை போட்டு வேட்டை கும்பல் தெறித்து ஓட்டம்


ADDED : ஜூன் 19, 2025 11:56 PM

Google News

ADDED : ஜூன் 19, 2025 11:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்: சிறுமுகை வனப்பகுதியில் தேடுதல் வேட்டைக்கு சென்ற வனத்துறையினரை பார்த்ததும், வேட்டை கும்பல் தப்பி ஓடியது. அவர்கள் விட்டுச்சென்ற நாட்டு துப்பாக்கியை வனத்துறையினர் கைப்பற்றி விசாரிக்கின்றனர்.

கோவை மாவட்டம், சிறுமுகை வனச்சரகம் மிகவும் அடர்ந்த வனப்பகுதியாக, 11 ஆயிரம் ஹெக்டேர் வனப்பரப்பை கொண்டதாக உள்ளது. இங்கு மான் உள்ளிட்ட வனவிலங்குகளை வேட்டையாடி, சந்தன மரங்களை வெட்டி கடத்தும் கும்பல் நடமாட்டம் உள்ளதாக வனத்துறையினருக்கு தெரியவந்தது.

இரும்பறை பகுதியில் வேட்டை கும்பல் பதுங்கி இருப்பதாக வனத்துறையினருக்கு நேற்று முன்தினம் இரவு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, வனத்துறையினர் அங்கு சென்றனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த வேட்டை கும்பலை சேர்ந்த, ஐந்து பேர் வனத்துறையினரை கண்டதும் தப்பி ஓடினர். உடனே வனத்துறையினர் அவர்களை விரட்டிச் சென்றனர். ஆனால் அதற்குள் அவர்கள் மாயமானார்கள்.

தப்பி ஓடிய அவசரத்தில் வேட்டைக் கும்பல் தோட்டாவுடன் கூடிய நாட்டு துப்பாக்கியை அங்கேயே விட்டு சென்றனர். அந்த துப்பாக்கியை பறிமுதல் செய்த வனத்துறையினர் அதை சிறுமுகை போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.

இதையடுத்து தப்பிச் சென்ற வேட்டைக் கும்பலை போலீசார் மற்றும் வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us