/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரயில்வே ஸ்டேஷனில் பெயர் பலகை மாற்றம்! 'சந்திப்பு' என தமிழில் எழுதியாச்சு
/
ரயில்வே ஸ்டேஷனில் பெயர் பலகை மாற்றம்! 'சந்திப்பு' என தமிழில் எழுதியாச்சு
ரயில்வே ஸ்டேஷனில் பெயர் பலகை மாற்றம்! 'சந்திப்பு' என தமிழில் எழுதியாச்சு
ரயில்வே ஸ்டேஷனில் பெயர் பலகை மாற்றம்! 'சந்திப்பு' என தமிழில் எழுதியாச்சு
ADDED : ஜூன் 30, 2025 10:26 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில், தமிழில் எழுத்துப்பிழையுடன் இருந்த பெயர் பலகை அகற்றப்பட்டு, புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின், 'அம்ரித் பாரத்' திட்டத்தின் கீழ், ரயில் சந்திப்பு அல்லது ஸ்டேஷன்களை தொலைநோக்குப் பார்வையில் மேம்படுத்த பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
அதில், பயணிகளுக்கு உண்டான இருக்கைகள், காத்திருப்பு அறைகள், கழிவறை வசதிகள், மேற்கூரைகள், சுத்தமான குடிநீர் வழங்கல், குளிரூட்டப்பட்ட பயணியர், காத்திருப்பு அறை, ரயில் வருகை மற்றும் புறப்பாடு குறித்து டிஜிட்டல் திரைகள் அமைக்கப்படுகின்றன.
மாற்றுத்திறன் பயணியருக்கு வசதி ஏற்படுத்துதல், வாகன காப்பிடம் மற்றும் தேவையான கட்டடங்கள் கட்டுவதாகும்.
இத்திட்டத்தின் கீழ், 1,275 ரயில்வே ஸ்டேஷன்களை நவீனமயமாக்கி மேம்படுத்தப்படுகிறது. அதில், பாலக்காடு கோட்டத்துக்குட்பட்ட ரயில்வே ஸ்டேஷன்களில் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில் மறு சீரமைப்பு செய்தல், 7.75 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படுகிறது. தற்போது, முகப்பு பகுதி முழுமையாக புதுப்பிக்கப்பட்டு, 'பொள்ளாச்சி ஜங்ஷன்' என தமிழ், ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் பெயர் பலகை வைக்கப்பட்டது.
மும்மொழியில், பொள்ளாச்சி ஜங்ஷன் என்ற வார்த்தை, தமிழில், 'ஜங்' என எழுதுவதற்கு பதிலாக, 'பொள்ளாச்சி ஜ்' என எழுத்துப்பிழையுடன் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இது குறித்து, பாலக்காடு கோட்ட ஆலோசனை குழு உறுப்பினர் ஆனந்தகுமார், பாலக்காடு ரயில்வே அதிகாரிகளுக்கு எழுத்துப்பிழையை மாற்ற வலியுறுத்தினார்.
இதையடுத்து, எழுத்துப்பிழையுடன் இருந்த அறிவிப்பு பலகை மாற்றப்பட்டு, 'பொள்ளாச்சி சந்திப்பு' என தமிழில் எழுதப்பட்டு, புதிதாக பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.