sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

இருசக்கர வாகன ஸ்டாண்ட் 19ம் தேதி மறுஏலம்

/

இருசக்கர வாகன ஸ்டாண்ட் 19ம் தேதி மறுஏலம்

இருசக்கர வாகன ஸ்டாண்ட் 19ம் தேதி மறுஏலம்

இருசக்கர வாகன ஸ்டாண்ட் 19ம் தேதி மறுஏலம்


ADDED : மே 12, 2025 12:18 AM

Google News

ADDED : மே 12, 2025 12:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னுார்; இருசக்கர வாகன ஸ்டாண்டுக்கான மறு ஏலம் வரும் 19ம் தேதி நடைபெறுகிறது.

அன்னுார், வார சந்தையில், சுங்கம் வசூலிக்கும் உரிமை மற்றும் பஸ் ஸ்டாண்டில் உள்ள இருசக்கர வாகன ஸ்டாண்டில் கட்டணம் வசூலிக்கும் உரிமைக்கான ஏலம் கடந்த மார்ச் மாதம் நடந்தது. இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் ஏப்ரல் 28ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கடந்த 28ம் தேதியில் வார சந்தை ஏலம் உறுதி செய்யப்பட்டது. வாகன ஸ்டாண்டில் கட்டணம் வசூலிப்பதற்கான உரிமை, ஒரு மாதத்திற்கு 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது.

எனினும் மற்றொரு ஏலதாரர் கூடுதலாக 25 சதவீதம் கணக்கிட்டு, 2, 62,000 ரூபாய் செலுத்துவதாகவும், 11 மாத தொகையை பேரூராட்சியில் செலுத்தினார்.

இதையடுத்து மறு ஏலம் நடைபெறும் என பேரூராட்சி அறிவித்தது. 'வரும் 19ம் தேதி காலை 11:00 மணிக்கு மறு ஏலம் நடைபெறும்,' என பேரூராட்சி தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us