sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

61 நாட்கள் தடைக்காலம் முடிந்தது கடலுக்கு சென்ற கடலுார் மீனவர்கள்

/

61 நாட்கள் தடைக்காலம் முடிந்தது கடலுக்கு சென்ற கடலுார் மீனவர்கள்

61 நாட்கள் தடைக்காலம் முடிந்தது கடலுக்கு சென்ற கடலுார் மீனவர்கள்

61 நாட்கள் தடைக்காலம் முடிந்தது கடலுக்கு சென்ற கடலுார் மீனவர்கள்


ADDED : ஜூன் 16, 2024 06:14 AM

Google News

ADDED : ஜூன் 16, 2024 06:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: மீன்பிடி தடைக்காலம் 61 நாட்கள் முடிந்து, நேற்று அதிகாலை முதல் கடலுார் மாவட்ட மீனவர்கள் விசைப் படக்கில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ், கடலில் மீன் வளம் பாதுகாக்கும் வகையில் கிழக்கு கடல் பகுதியில் கடந்த ஏப்., 15ம் தேதி முதல் ஜூன் 14 வரையில், 61 நாட்கள் ஆழ்கடலில் மீன் பிடிக்க அரசு தடை விதித்து 'மீன்பிடி தடை காலம்' கடைப்பிடிக்கப்பட்டது.

கடலுார் மாவட்டத்தில் தேவனாம்பட்டினம், தாழங்குடா, துறைமுகம், நல்லவாடு, சிங்காரத்தோப்பு, சோனாங்குப்பம், அக்கரைக்கோரி, ராசாப்பேட்டை, சொத்திக்குப்பம், சித்திரைப்பேட்டை உள்ளிட்ட 49 மீனவ கிராம மீனவர்கள் மீன்பிடி தடை காலம் காரணமாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதனால் கடலுார் மற்றும் கிள்ளை அன்னங்கோவில் மீன்பிடி துறைமுகம் பகுதியில் 4.500க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையோரம் நிறுத்தி வைத்தனர்.

மீன்பிடி தடைக் காலத்தில் மீனவர்கள் தங்கள் படகுகள், மீன்பிடி வலைகள் பழுது நீக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். மீன்பிடி தடைக்காலம் 61 நாட்கள் முடிந்த நிலையில் நேற்று அதிகாலை முதல் கடலுார் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு ஆர்வமாக சென்றனர். இதனால் கடந்த இரு மாதங்களாக படகுகள் நிறுத்தப்பட்டிருந்த மீன்பிடி துறைமுகம் நேற்று வெறிச்சோடி கிடந்தன.






      Dinamalar
      Follow us