/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கலெக்டரின் மனைவி கமிஷனராக நியமனம்
/
கலெக்டரின் மனைவி கமிஷனராக நியமனம்
ADDED : ஜூலை 23, 2024 02:41 AM

கடலுார் : கடலுார் மாநகராட்சியில் முதல் முறையாக ஐ.ஏ.எஸ்., அதிகாரி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடலுார் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின் பல்வேறு கமிஷனர்கள் பதவி வகித்து வந்தனர். இறுதியாக காந்திராஜ் கமிஷனராக பதவி வகித்து வந்தார். முதல் முறையாக ஐ.ஏ.எஸ்., அதிகாரியான அனு என்பவரை, கமிஷனராக நேற்று அரசு நியமித்துள்ளது.
இவர், தமிழக அரசின் துணை செயலாளராக பதவி வகித்து வந்தார். இவரது கணவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், கடலுார் கலெக்டராக கடந்த 19ம் தேதி பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடலுார் மாநகராட்சி அந்தஸ்து பெற்று, முதல் முறையாக ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஒருவர் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளதால், அங்கு பணிபுரியும் அதிகாரிகள் 'ஷாக்' ஆகி உள்ளனர்.