/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மொபைல் போன் டவரில் ரூ. 10 லட்சம் பொருள் திருட்டு
/
மொபைல் போன் டவரில் ரூ. 10 லட்சம் பொருள் திருட்டு
ADDED : ஜூலை 14, 2024 03:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார், : தனியார் மொபைல் போன் டவரில் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை, கீழப்பாக்கத்தைச் சேர்ந்தவர் கார்த்திக், 29; தனியார் மொபைல் நிறுவன டவர் பராமரிக்கும் மேலாளர். இவர், கடலுார் மஞ்சக்குப்பம், நேதாஜி சாலையில் கடந்த டிச., 15ம் தேதி சம்பந்தப்பட்ட மொபைல் டவரை ஆய்வு செய்தார்.
அப்போது, ஜெனரேட்டர் உள்ளிட்ட 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், கடலுார், புதுநகர் போலீசார் நேற்று வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.