ADDED : ஜூலை 15, 2024 11:42 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெய்வேலி: நெய்வேலி தெர்மல் போலீசார் சார்பில், மேலகுப்பம் கிராமத்தில் நடந்த மக்கள் வளர்ச்சியில் மாவட்ட காவல்துறை முகாம் நிறைவடைந்தது.
நிகழ்ச்சிக்கு சப் இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார் தலைமை தாங்கினார். விளையாட்டு மற்றும் கலை இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு தெர்மல் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் பரிசு வழங்கினார்.
இயற்கை விவசாயி கோட்டேரி சிவகுமார் இயற்கை விவசாயத்தை பற்றி எடுத்துரைத்தார்.விழாவில் கிராம மக்களுக்கு கலப்படமில்லாத விதைகள் வழங்கப்பட்டது. சப் இன்ஸ்பெக்டர் செல்வக்குமார் நன்றி கூறினார்.