நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குள்ளஞ்சாவடி: குள்ளஞ்சாவடி அடுத்த சிவநந்திபுரம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சண்முகம் மகன், மணிகண்டன், 36; இவர், நேற்று முன்தினம் இரவு மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்து, வயலுக்கு அடிக்க வைத்திருந்த களைக்கொல்லி மருந்தை குடித்தார்.
ஆபத்தான நிலையில், கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர், மேல் சிகிச்சைக்காக, புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் நேற்று காலை உயிரிழந்தார்.
குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.