sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பச்சை நிறமானது வீராணம் ஏரி நீர் பொதுமக்கள், விவசாயிகள் அச்சம் 

/

பச்சை நிறமானது வீராணம் ஏரி நீர் பொதுமக்கள், விவசாயிகள் அச்சம் 

பச்சை நிறமானது வீராணம் ஏரி நீர் பொதுமக்கள், விவசாயிகள் அச்சம் 

பச்சை நிறமானது வீராணம் ஏரி நீர் பொதுமக்கள், விவசாயிகள் அச்சம் 


ADDED : ஜூலை 12, 2024 08:44 PM

Google News

ADDED : ஜூலை 12, 2024 08:44 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேத்தியாத்தோப்பு:கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அடுத்த பூதங்குடி வீனஸ் மதகில் துவங்கும் வீராணம் ஏரி, லால்பேட்டை வரை 14 கி.மீ., துாரமும், 5 கி.மீ., பரப்பளவில் 32 பாசன மதகுகளை கொண்டுள்ளது. மொத்தம், 1,465 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கொண்ட ஏரியில் தற்போது, 1,300 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.

இந்த ஏரியால், 50,000 ஏக்கர் விளை நிலங்கள் பாசனம் பெறுகின்றன. சென்னை மக்களின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்கிறது. கடந்த, 17ம் தேதி மேட்டூரில் இருந்து, 2,000 கன அடி வீதம் திறக்கப்பட்ட தண்ணீர், 26ம் தேதி கீழணைக்கு வந்தது. அங்கிருந்து திறக்கப்பட்ட நீர் வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வந்தது.

தற்போது ஏரிக்கு வரும் தண்ணீர் பச்சை நிறமாக உள்ளதை கண்டு விவசாயிகள், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். நீர்வளத்துறை அதிகாரிகள் ஏரி நீரை மாதிரி எடுத்து ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். ஏரி நீர், நிறம் மாறியது குறித்து நீர்வளத்துறை அதிகாரிகளிடம், பசுமை தீர்ப்பாயம் விளக்கம் கேட்டுள்ளது.

ஏரி நீர் நிறம் மாறியிருப்பதால், விவசாயிகள், கால்நடைகளுக்கு தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய அச்சப்படுகின்றனர். ஏரி நீர் நிறம் மாறியதற்கான காரணத்தை ஆராய்ந்து, பொதுமக்கள், விவசாயிகளின் அச்சத்தை போக்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us